சில மணித்துளிகளே இவ்வுலகில் வாழும்
வண்ணப் பூக்கள் எப்போதும்
தங்கள் முகங்களை அவ்வளவு அழகாக
புன்சிரிப்புடன் வைத்துக் கொள்கின்றன!
சில நிமிடங்களே உயிர்வாழும்
அழகான பனித்துளிகள்
புல்லின் மேல் அழகாய் படர்ந்து
நம் மனதைக் கொள்ளையடிக்கின்றன!
ஏன் நம் அழகான புன்சிரிப்பால்
மற்றவர் மனதைக் கொள்ளையடிக்க முடியாது?
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக