வியாழன், 21 டிசம்பர், 2017

காத்திருக்கச் சொன்னால்!

எனக்காகக் காத்திரு என்று
அவள் கூறும் ஒருவார்த்தைக்காய்
ஒன்பது வருடங்கள் காத்திருந்தேன்!
காத்திருத்தலின் வலி தான்
அதிகரித்ததே தவிர
அவளால் என் மனதில்
ஏற்பட்ட காயங்களின் வலி
குறையவே இல்லை!
இப்படித் தான்
இவளைக் காதல் செய்ய வேண்டுமா
என்று நினைத்து
என் மனதை நானே மாற்றிக்கொண்டேன்!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: