செவ்வாய், 19 டிசம்பர், 2017

மனதும் வலி அறியும் தானே!

நாம் விரும்பும் நபர்
நம்மை விரும்பாமல்
மற்றவருடன் சிரித்துப்பேசும் போது!

நாம் நண்பர்கள் என்று நினைத்து
அனுதினமும் அவர்களுடன்
உரையாட விரும்பும்போது
அவர்கள் நம்மை
ஒருபொருட்டாகக் கூட
மதிக்காத போது!

அவர்களுக்கு நாம் எதுவும்
அனுப்பாத போது
அவர்களும் நமக்கு எதுவும் அனுப்பாமல்
நாம் அவர்களுக்கு முக்கியமில்லை
என்பதை உணர்த்தும் போது!

அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கும்போது
ஏதோ வேண்டா வெறுப்பாக
நம்மைப்பார்க்க வரும் போது!

நம்மைப் பற்றி மற்றவர்களிடம்
இல்லாதவை பொல்லாதவை
எல்லாம் சொல்லும் போது!

நாமே வேண்டாமென்று
அவரை வெறுத்து ஒதுக்க
நினைக்கும் போது
நம்மை நெருங்கி வரும்
அவர்களின் ஏமாற்றும் வித்தைகளின் போது!

மனம் ஏனோ வலிக்கின்றது தான்!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: