ஞாயிறு, 17 டிசம்பர், 2017

மனம் மாறுதே!

தனியாய் இருக்க ஆசைப்பட்ட நீ
இப்போது குடும்பமாய் வாழ ஆசைப்படுகிறாய்!
சோர்ந்து போய் அலைந்துகொண்டிருந்த நீ
இப்போது சுறுசுறுப்பாய் இருக்க ஆசைப்படுகிறாய்!
கடிந்து கடிந்து பேசிய நீ
இப்போது புன்முறுவலுடன் பேச ஆசைப்படுகிறாய்!
அறையிலேயே அடைந்துகிடந்த நீ
நடுவறையில் அமர்ந்து குடும்பத்துடன் உரையாட ஆசைப்படுகிறாய்!
வீட்டைவிட்டு வெளியேறாத நீ
வெளியில் செல்ல ஆசைப்படுகிறாய்!
சுற்றம் என்ன நினைக்குமென்று ஏங்கிய நீ
சுதந்திரமாக இருக்க ஆசைப்படுகிறாய்!

இந்த மாற்றங்களுக்குக் காரணம்
உன்னை நீயே புரிந்து கொண்டது தான்!
இனியபாரதி.

கருத்துகள் இல்லை: