வெள்ளி, 15 டிசம்பர், 2017

உன்னைப்போல்....

ஆயிரம் தந்தையர்களைப் பார்த்திருப்பேன்...
சற்று கூட முகம் சுழிக்காமல் பேசும் குணம்
உம்மிடம் மட்டுமே பார்த்தேன்!!!
என்னைக் கேலியாய் யாருடனாவது
சேர்த்து வைத்துப் பேசியது வார்த்தையில் மட்டுமே அன்று
உணர்வுகளில் அல்ல!
ஒருநாளும் மற்றவர்க்குத் தீங்கிழைக்காத எண்ணம்
உமக்கே உரியது!
உம் வாயின் வார்த்தைகளைக் கேட்க
நாங்கள் தவமிருந்த நாட்கள் உண்டு...
என்ன நடந்தாலும்
'அவனைப்போகச் சொல்லுங்க... முட்டாப்பையன்'
என்று ஒருவார்த்தையில் முடித்துவிடும்
பழக்கம் உம்மைத் தவிர யாருக்கும் இல்லை!
இணையத்தில் புகுந்துவிளையாடுவதில்
சிறிதளவு தடுமாற்றம் இருந்தாலும்
கற்றுக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தோடு
நீர் கேட்கும் ஒவ்வொரு கேள்விகளும்
ஆச்சரியம் தான்!
உம்மிடம் வருபவர்க்கு இல்லை என்று
ஒருபோதும் சொன்னதில்லை!
எதையாவது எடுத்துக்கொடுத்து 'இதைக் கொண்டுபோ'
என்று தான் நீர் சொல்லிப் பார்த்திருக்கிறோம்!
எதற்கும் துணிந்தவராய்
இந்த வயதிலும்
தன்னம்பிக்கையோடு
தன் வேலைகளைத் தானே செய்து
எங்களுக்கு முன்மாதிரியாய்
விளங்கிச் சென்று
இன்று தங்கள் உயிரை இழந்து
விண்ணக வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட
எங்கள் அன்புத் தந்தைக்கு...
ஆழ்ந்த இரங்கல்கள்...

வருத்தத்துடன்...
இனியபாரதி.

கருத்துகள் இல்லை: