கடந்த இரண்டு வாரங்களாகச் சரியாக எழுத முடியவில்லை... ஆண்டின் இறுதி நாட்களில், இந்த வருடம் முழுவதும் நடந்த பல நல்ல நிகழ்ச்சிகளையும், சிலபல கண்ணீருக்கான நிகழ்வுகளையும் மனம் எண்ணிப் பார்க்கின்றது.
சென்ற வருடம் எடுத்த முடிவுகளில், இந்த வருடம் முழுவதும், அனுதினமும் என்னுடைய வலைப்பதிவைப் பதிவிட வேண்டுமென்று நினைத்திருந்தேன். நான்கு நாள்கள் முடியாத பட்சத்தில், மற்ற நாட்கள் எல்லாம் என்னால் இயன்ற அளவு, என் எழுத்துத் திறனை உபயோகப்படுத்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.
இந்த வருடம் முழுவதும் எனக்கு நல்ல சுகத்தைக் கொடுத்து, நான் எழுத எனக்குப் பலன் தந்த இறைவனுக்குத் தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.
இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், வருகின்ற நாட்களிலும் என்னை நல்ல முறையில் நடத்துவார்.
நேற்று பாரதியைப் பற்றி ஏதாவது எழுதலாம் என்று நினைத்து அமர்ந்த எனக்கு ஏமாற்றமே!
எழுத முடியாத நிலை.
இன்று எழுதுகிறேன்!
'நீ பிறந்த காலத்தில்
ஒரு அலைபேசி கூட இல்லை...
அப்படி இருந்தும் நீ காதலித்திருக்கிறாய்!
உன் காதலை வெளிப்படுத்த உனக்கு
நேரம் கிடைத்தது!
உன் காலத்தில் தான்
தொழில்நுட்பக் கருவிகள் ஏதும் இல்லாததால்
உன் கவிதை விடு தூதுகளால்
அனைவரின் மனத்தையும் கவர்ந்தாயோ?
உன் வளரிளம் பருவத்தில்
என்னென்ன விளையாட்டுகள் எல்லாம்
விளையாடியிருப்பாய்?
உன்னுடன் சேர்ந்து விளையாட
எத்தனை நண்பர்கள் இருந்திருப்பார்கள்?
என் மகாகவியாகிய உன்னைப் பற்றி
நினைத்து நினைத்து நெஞ்சம் நெகிழ்ந்தேன்!
உன் கவிதைகள் உன் வாழ்க்கைச் சூழலை
நான் அறிய உதவுகிறது!
நீ இன்றும்
உயிருடன்
எங்களுக்கு வழிகாட்டியாய் இருந்திருக்கக் கூடாதா
என்ற ஏக்கம் மட்டுமே எங்கள் நெஞ்சில்!'
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக