சனி, 16 டிசம்பர், 2017

கானல் தேவதை...

சற்று நேரம் மட்டுமே
என்னுடன் இருந்து விட்டுப் போக
உனக்கு மட்டும்
எப்படி மனம் வந்தது.... 'மகிழ்ச்சி'
வெகுநேரமாகியும் வராமல்
தவிக்கவிட
உனக்கு மட்டும்
எப்படி மனம் வந்தது... 'தூக்கம்'
என் அருகிலுள்ளவரிடம்
மட்டும் இருந்துகொண்டு
என்னிடம் வர பயப்பட
உனக்கு மட்டும்
எப்படி மனம் வந்தது... 'பணம்'
எனக்கு எப்போதாவது அமிர்தம்
அருந்தக் கொடுத்துவிட்டு
அடிக்கடி ஆழ்கடலில் ஆழ்த்த
உனக்கு மட்டும்
எப்படி மனம் வந்தது... 'வெற்றி'

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: