நம் நண்பரிடமோ, உற்றவரிடமோ, தாயிடமோ, தந்தையிடமோ அவர்கள் எப்போதும் ஒரே மாதிரியாக நம்மிடம் நடந்து கொள்ள வேண்டுமென்று நினைக்கிறோம். அதாவது எப்போதும் சந்தோசமாக, மகிழ்ச்சியான முகத்துடன், புன்முறுவலுடன் இருக்க வேண்டுமென்று நினைக்கிறோம். ஆனால், அது பல நேரங்களில் நாம் நினைப்பதைப் போல் நடப்பதில்லை.
அப்போது நாமும் கோபமும், கலக்கமும் அடைகிறோம். பல நேரங்களில் மனம் நொந்து அழுகின்றோம். ஆனால், அவர்களின் அப்போதைய நிலைமையை நாம் கொஞ்சம் கூட எண்ணிப் பார்ப்பதில்லை.. அதற்கு ஒரு சிறந்த உதாரணம் தான், என் நண்பனால் இன்று சொல்லப்பட்ட ஒரு உவமை...
பஞ்சை ஏதாவது ஒரு கலர் சாயத்தில் நனைத்து காயவைத்தாலும், காயந்த பஞ்சை மறுபடியும் பிரித்தால், அது பழைய நிலைக்கு வந்துவிடும். அதைப்போலத்தான் மனிதனின் மனமும் என்றார்.
என்ன தான் நான் நல்லவளாக/நல்லவனாக இருந்தாலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அதைக்கடைபிடிக்கத் தவறிவிடுகிறேன். இதற்கெல்லாம் பயிற்சி மிகவும் அவசியம்.
ஒருவர் காயப்படுத்தும் போது அதைத் தாங்கிக் கொள்வதற்கும்...
மற்றவரை நாம் காயப்படுத்தாமல் இருப்பதற்கும்...
மன்னிப்புக் கேட்பதற்கும்...
மன்னிப்புக் கேட்பவரை ஏற்றுக் கொள்வதற்கும்...
பொறாமை கொள்ளாமல் இருப்பதற்கும்...
மற்றவரின் நிலையில் இருந்து யோசிப்பதற்கும்...
நிறைய பயிற்சி தேவை...
கற்க முயல்கிறேன்!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக