வியாழன், 14 டிசம்பர், 2017

கண்டுகொள்ளாமல்...

நானும்
எதைப்பற்றியும் யாரைப்பற்றியும்
கண்டுகொள்ளாமல்
என் நாட்களைக்
கழிக்க வேண்டுமென்று தான்
நினைக்கிறேன்!
என் மனம் அவளை நினைக்கச் சொல்கிறது!
என் உள்ளம் அவள் அழைப்பிற்காய் காத்திருக்கின்றது!
என் முவ்வேளைகளும் அவளை மட்டுமே நினைவுபடுத்துகின்றன!
என் அறையின் வாசம் அவள் வாசத்தைக் கொண்டுவருகின்றது!
என் சுவாசம் அவளின் சுவாசத்தை உணரச் செய்கின்றது!
என் தனிமை அவளின் அருகாமையை நினைத்துப் பார்க்கத் தூண்டுகின்றது!
இப்படி என் அனைத்திலும் அவள் மட்டுமே இருக்க
நான் யாரைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியுமென்று
என்னால் உணர முடியவில்லை!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: