நம் பிறந்த நாளை மற்றவர் ஞாபகம் வைத்து
இன்ப அதிர்ச்சி கொடுக்கும் அந்த சில நிமிடங்கள்...
நாம் வெகுநாட்களாகத் தந்தையிடம் கேட்டுக் கொண்டிருந்தது
திடீரென நம் அறையில் இருப்பதைப் பார்க்கும் அந்த நிமிடம்...
சகோதரனே இல்லையென்று புலம்பிக் கொண்டிருக்கும் போது
எங்கிருந்தோ வரும் சகோதர உறவு....
சரியாகப் பார்க்காமலும் பேசாமலும் இருந்து தன் அன்பை
மற்றவர்க்கு வெளிப்படுத்தும் உறவுகள்...
இந்த இடத்திற்குச் செல்ல வேண்டுமென்று வெகுநாட்கள் நினைத்தும்
காணமுடியாமல் முதிர்வயதில் அந்த இடத்தில் நம் துணையுடன்
நின்று பேசிக் கொண்டிருக்கும் போது....
நம் தேவைகளை இறைவனிடம் கொட்டிவிட்டு 'அவன் பார்த்துக் கொள்வான்' என்று
நிம்மதிப்பெருமூச்சு விடும் சமயத்தில் நமக்குக் கிடைக்கும்
அந்த உதவி...
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக