வெள்ளி, 10 நவம்பர், 2017

அடங்க மறுக்கும் ஆசைகள்!

காலைக் கதிரவனுக்கு முன்
சீக்கிரம் எழ ஆசை!
நடுச்ஜாமத்தில் தனியாகத் தெருவில்
நடக்க ஆசை!
ஆண்களை விஞ்சும் அளவுக்குப்
பலம் கிடைக்க ஆசை!
இயற்கை எழில் கொஞ்சும்
புத்துலகைக் காண ஆசை!
கடற்கன்னியுடன் ஒரு நாள்
செலவிட ஆசை!
விண்மீன்களுக்கு இடையில் நின்று
புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசை!
இவற்றையெல்லாம் எழுதும் எனக்கு
இன்னும் கற்பனைத் திறன் வளர ஆசை!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: