வியாழன், 23 நவம்பர், 2017

யாரை நம்பி!

நான் யாரையும் நம்பி வாழத்தேவையில்லை
என்றிருக்கிறவர்கள்
சந்தர்ப்பம் வரும்போது யாரை நம்பலாம் என்று
குழம்பித்தவிக்கிறார்கள்!
என்னை நம்பி ஒரு குடும்பமே இருக்கிறதென்று
நினைக்கும் போது
நாம் அவர்களுக்குத் தேவைப்படுவதேயில்லை!
அவர்களுக்குத் தேவைப்படும் சமயத்தில்
நாமும் இருப்பதில்லை!
இப்படி யாரை நம்பி வாழ்வது என்ற குழப்பத்திலேயே
வாழ்க்கை முடிந்து விடும் போலும்!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: