புதன், 15 நவம்பர், 2017

தன்னலம் அறியா...

அன்னை மட்டுமே தன்னலம் துறந்து
தன் குழந்தையின் நலனுக்காய் இருப்பாள்!
அவளுக்கு அடுத்து தந்தை என்று கூறலாம்!
இவ்விருவருக்கும் அடுத்து
நண்பர்களைத் தான் கூற வேண்டும்!
தன்னுடன் உயிருக்குயிராகப் பழகிய
எந்த நண்பனையும் எதற்காகவும்
சுலபமாக விட்டுக் கொடுக்காதது
நட்பு மட்டுமே!
உயிரைவிட மேலாகவும் சிலநேரங்களில்
நினைக்கத் தோன்றுவதும் நட்பே!
நல்ல நட்பு நமக்குக் கிடைப்பது
இறைவன் நம் நண்பனாய் இருப்பது போல!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: