வெள்ளி, 6 அக்டோபர், 2017

எழுதுவதின் சாராம்சம்...

யார் வேண்டுமானாலும் எழுதலாம்...
என்ன வேண்டுமானாலும் எழுதலாம்
என்ற எண்ணம் தான்
இன்றுவரை என் மனதில் இருந்தது!
இன்று தான் உணர்ந்தேன்
எழுதுவதற்கும் சில வரைமுறைகள் உண்டென்று!!!
யார் மனதையும் புண்படுத்தக் கூடாது!
சிலரின் ஜாதிகளையும் மதங்களையும் பற்றி எழுதக் கூடாது!
தோலின் நிறங்களைப் பற்றி எழுதக் கூடாது!
செல்வத்தைப் பற்றி எழுதக் கூடாது!
படிப்பைப் பற்றி எழுதக் கூடாது!
அரசியலைப் பற்றி எழுதக் கூடாது!
நாட்டின் ஊழல் குறித்து எழுதக் கூடாது!

மேற்சொன்னவற்றைப் பற்றிப் பேசினாலும்
அப்படி ஏதாவது அதைக் குறித்து விமர்சனம் செய்தாலும்
பாதிக்கப்படுவது எழுத்தாளர் தான்!

வார்த்தைகள் எவ்வளவு முக்கியம் என்பதை
இன்று உணர்ந்தேன்!!!
எழுத்தாளர் ஆவதும் அவ்வளவு சுலபமல்ல.....
எல்லாவற்றிற்கும் கடின உழைப்பு அவசியம் தான்!!!!
இனியாவது நான் எழுதுவதை மற்றவரிடம்
கொடுப்பதற்கு முன் மும்முறை படித்துப் பார்த்துவிட்டுத் தான்
படைக்க வேண்டும்!!!

நன்றி அண்ணா!!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: