அழகை இரசிக்கும்!!!
உடலழகை இரசிக்கும்
ஆணவ ஆண் வர்க்கம்,
உள்ளத்தழகை இரசிக்கத்
தவறி விடுகிறது!!!
உன்மீது வரும் கோபம்...
மற்ற ஆண்களைப் பற்றி
நீ பேசும் போது மட்டும்
எனக்கு ஏன் இவ்வளவு கோபம்
வருகிறதென்று
எனக்கே தெரியவில்லை!!!
அன்பின் உச்சத்தில்....
உனக்காக நானும்
எனக்காக நீயும்
என்று வாழும் போது
இடையில்
வரும் மரணம் கூட
மனத்திற்கு மகிழ்ச்சி தான்....
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக