இன்பமும் துன்பமும் கலந்தது தான்
வாழ்க்கை என்பதை உணர்ந்தால்...
பிறப்பு ஒன்று இருக்கிறதென்றால்
இறப்பும் வந்தே சேரும்
என்ற எண்ணம் யாராலும் மறுக்கப்படமாட்டாது!
பிறக்கப்போகின்ற குழந்தைக்காய்
நாம் தயாரிப்புகள் செய்வது வழக்கம்!!!
ஆனால், 'நான் இறக்கப்போகின்ற நாளுக்காக
ஆயத்தம் செய்கிறேன்' என்பது சற்று வேடிக்கையாகவே உள்ளது!!!
இறப்பு – ஒரு நிகழ்வு...
அந்நிகழ்வு நமக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை என்றாலும்
அதை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்...
அதற்காகப் பயந்து கொண்டு அறையைப் பூட்டிக் கொண்டு
உள்ளேயே இருக்க வேண்டும் என்றில்லை...
நாம் வாழும் ஒவ்வொரு நிமிடத்தையும்
நம் மனதிற்குப் பிடித்தவாறு
நம் உறவுகளுடன்
இனிமையாக வாழ்வோம்!!!!
இறப்பின் வாசல் கூட
சொர்க்க வாசலே!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக