கோபப்பட்டுப் பேசும் போது
என் தாய் என்னை வெறுக்கிறாள் என்று
நானாக நினைத்துக் கொண்டேன்!
கண்டுகொள்ளாமல் இருக்கும் போது
என் தந்தைக்கு என்மேல்
அக்கறை இல்லையென்று
நானாக நினைத்துக் கொண்டேன்!
என்னுடன் சண்டையிடும் போது
என் சகோதரிக்கு என்மேல்
பாசமில்லை என்று
நானாக நினைத்துக் கொண்டேன்!
வெளியில் கிளம்பும் போது
என் எதிர்வீட்டுக்காரன்
என்னைப் பார்க்கிறான் என்று
நானாக நினைத்துக் கொண்டேன்!
தெருவில் நடக்கும் போது
எல்லோர் கண்களும் என்மேல் என்று
நானாக நினைத்துக் கொண்டேன்!
நண்பர்கள் என்னைப் பாராட்டும் போது
நான் தான் அழகென்று
நானாக நினைத்துக் கொண்டேன்!
கஷ்டங்கள் வரும்போது
எனக்கு மட்டும் தான்
கடவுள் கொடுக்கிறார் என்று
நானாக நினைத்துக் கொண்டேன்!
ஓரக்கண்ணில் பார்க்கும் போது
அவள் என்னை மட்டும் தான்
பார்க்கிறாள் என்று
நானாக நினைத்துக் கொண்டேன்!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக