அருகில் இருக்கும் போதெல்லாம்
அரவணைத்துக் கொண்டு
அன்பைப் பொழியும் உன்னை
புரிந்து கொள்ளாமல் விட்டதென்னவோ
என் தவறு தான்!
உன்னைத் தொலைத்தபின் தான் தெரிகிறது
அன்பின் அருமை கூட!!
உன்னைத் தேடிக் கொண்டு என் பயணத்தைத்
ஆரம்பித்தேன்...
இன்னும் தேடிக் கொண்டு தான் இருக்கிறேன்!
எப்போது கண்டடைவேன் என்பதை யாரறிவார்?
கவலையில் மிதந்து
கால்கள் சோர்ந்து
இளைப்பாற நிழல் நாடினேன்!!!
தொலைத்த என்னைத் தேடத் தோள் கொடுத்தது
'என் அன்னையின் மடி'
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக