வெள்ளி, 27 அக்டோபர், 2017

உன் காலடியில் தான்...

வைரம் தங்கத்தைப் பார்த்து
கௌரவப்பட்டுக் கொண்டது
'நான் உன்னைவிட விலைமதிப்பற்றவன்' என்று....
மாடி வீடு குடிசை வீட்டைப் பார்த்து
பெருமைப்பட்டுக் கொண்டது
'நான் உன்னைவிட உயர்ந்து நிற்கிறேன்' என்று...
அழகு அசிங்கத்தைப் பார்த்து
சிலிர்த்துக் கொண்டது
'நான் தான் அழகானவன்' என்று...
தோற்பை சுருக்குப்பையைப் பார்த்து
ஏளனமாய் சிரித்தது
'என்னிடம் தான் பணபலம்' என்று...
இவை எல்லாவற்றையும் பார்த்து
மனிதன்
சிரித்துக் கொண்டு இருந்தான்...
அவனைப் பார்த்து
மண்
'உன்னை என்னுள் அடக்கினால் நீ ஒன்றுமில்லை' என்றது!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: