இந்த உலகில் யாராலும் முடியாதென்று
ஏதாவது உண்டென்றால் அதை நிகழ்த்த
இறைவனால் மட்டுமே முடியும்!
அவர் எங்கும் நிறைந்திருப்பவர்!
அமைதியை உருவாக்கும் உள்ளங்களில் வாழ்பவர்!
எத்தீங்கும் நினையாதவர்!
நம் சுக துக்கங்களில் பங்கெடுக்கக் கூடியவர்!
நம் ஆயுளைக் கூட்டவோ குறைக்கவோ அதிகாரம் கொண்டவர்!
அன்பால் அனைத்தையும் வெல்பவர்!
பாசத்தோடு பார்ப்பவர்களுக்குப் பதிலளிப்பவர்!
அவரைக் காண நாம் எங்கெங்கோ ஓடித் தேடத் தேவையில்லை!
அவர் நம் உள்ளங்களில் உறைந்திருக்கிறார்!!!!
கண்டுகொள்வோம்!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக