வியாழன், 26 அக்டோபர், 2017

கோபிப்பது யாராகினும்....

நான் எழுதிய கல்லூரிக் காலக் கவிதைகளுள் சில....

நான் கோபப்படும் சில தருணங்களில்

நீ அமைதியாயும்

நான் அமைதியாய் இருக்கும் சில தருணங்களில்

நீ கோபப்படுவதும்

சகஜம் தான் என்றாலும்

அன்பு செய்வது 'நாம் இருவருமாகத் தான்'

இருக்க வேண்டும்...

கப்பல் கூட நடுக்கடலில் கவிழலாம்!

என் காதல் என்றும் கவிழாது!!!

உன்னுடன் பேசுவதாய் நினைத்து

நானாகப் பேசிக்கொண்டே நடந்து சென்ற

நாட்களே 'என் வசந்த நாட்கள்'

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: