செவ்வாய், 10 அக்டோபர், 2017

நெஞ்சம் மறப்பதில்லை...

நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்...
நான் தான் இந்த உலகில் அனைத்தையும்
மறந்துவிடும் மறதிக்காரன் என்று!!
அது தான் தவறு!!!
நாம் எதையும் மறப்பதில்லை!!!
நம் இதயத்தின் ஆழத்தில்
ஏதாவது ஒரு மூலையில்
அனைத்து விசயங்களும்
பதுங்கிக் கிடக்கின்றன!
நமக்கு எப்போது தேவையோ
அவை அப்போது வெளிப்படும்!
காதல் கதைகள்!!!
நட்பு வட்டங்கள்!!!
சுட்டித்தனங்கள்!!!
வீண் வம்புகள்!!!
இப்படி அனைத்துமே நம் மனதில்
இருந்து கொண்டு தான் இருக்கின்றன!!!
அவை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில்
சிந்திப்பதில் தான் கடினம்!!!
'எப்படி நம் நெஞ்சம் மறக்கும்?'
அந்த இனிமையான தருணங்களை!!!

இனியபாரதி..

கருத்துகள் இல்லை: