சனி, 14 அக்டோபர், 2017

நடுநிசி ஓசைகள்...

அந்தி மாலையிலே ஏறி அமர்ந்த
பேருந்தின் ஓட்டத்தில்...
நிசப்தத்தின் மத்தியிலும்
சிறு சிறு முனகல்கள்..
பாடல்களின் ஓசைகள்....
இருவழிப்பாதை...
ஒற்றை விளக்கு வெளிச்சத்தில்
நாற்பத்தைந்து மனங்கள்
உறங்கிக் கொண்டிருக்கின்றன!!!
ஒரு உயிர் மட்டும்
மற்றவைகளுக்குப் பாதுகாப்பாய்
தன் உறக்கத்தைத் துறக்கிறது!!!
ஜன்னல் வழியாக வீசும் காற்று
நம் உணர்ச்சிகளைத் தூண்டத்தான்
பார்க்கின்றது!!!
வழிப்பாதையில் இருக்கும்
காடுகளில் பறவைகள், பூச்சிகள்
எழுப்பும் ரீங்காரங்கள் கூட
நமக்கு ரஹ்மானின் இசைதான்!!!
ரோட்டோரக் கடைகளின்
மின்விளக்கு வெளிச்சம்
கண்ணைப்; பறிக்கும்!!!
அந்த இரவுகளில் வரும்
நான்கு சக்கர கனரகவாகனங்களின்
ஓசை மட்டும்
இன்றும்; நீங்காமல்
நெஞ்சத்தில்
ஓசை எழுப்பிக் கொண்டே....
உன்னை நான் அடைந்துவிட்டேனென்று
எனக்கு உணர்த்துகின்றது!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: