இப்போது தான் ஆங்கிலப்புத்தாண்டைக் கொண்டாடியது போல் இருந்தது. அதற்குள் பத்து மாதங்கள் முடிந்து விட்டன. பதினொன்றாவது மாதத்தில் அடியெடுத்து வைக்கப் போகிறோம். இன்னும் இரண்டு மாதங்களில் அடுத்த புத்தாண்டைக் கொண்டாடப் போகிறோமா?
ஆச்சரியமாகத் தான் இருக்கின்றது!!!
எப்படி இந்தப் பத்து மாதங்கள் ஓடின?
இந்தப் பத்து மாதங்களில் எவ்வளவு நல்ல விசயங்கள் என் வாழ்வில் நடந்திருக்கின்றன?
நான் எத்தனை பேருக்கு உதவியாக இருந்திருக்கிறேன்?
எத்தனை பேரிடம் மனம்விட்டுப் பேசியிருக்கிறேன்?
எத்தனை புதிய நண்பர்கள் கிடைத்தார்கள்?
இப்படிப் பல கேள்விகளைக் கேட்டு, அதற்குப் பதிலும் கண்டுபிடிக்கலாம்.
சுவாரஸ்யமாகத் தான் இருக்கும்.
சில நேரங்களில், 'அப்படி என்ன இந்தப் பத்து மாதங்களில் சாதித்து விட்டேன்?
எல்லாம் அப்படியே தான் இருக்கின்றது! எதுவும் மாறவில்லை' என்ற சிலரின் புலம்பல் கூட என் காதுகளில் கேட்கின்றது.
நாம் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒருவகையில் வளர்ந்து கொண்டே தான் வந்திருப்போம். நம்மைத் தாழ்மையடைய, நம் இறைவன் ஒருநாளும் விடமாட்டார்.
எந்தத் துன்பம் வந்தாலும், அவரை மட்டும் நாடி, நம்மை அவரில் வளர்த்தெடுப்போம்.
வருகின்ற நாட்கள் இனிமையானதாக அமைய வாழ்த்துகளுடன்,
இனியபாரதி.