சில நேரங்களில் கண்களில்
காண்பதை எல்லாம் அனுபவித்துவிட
வேண்டுமென்ற எண்ணம் தோன்றுகின்றது!
சரியா! தவறா! என்றெல்லாம்
யோசிக்க நேரமே கிடைக்காது!
பார்த்ததும் முடிவெடுத்துவிடுகிறோம்
இது எனக்கு வேண்டுமென்று...
அது கிடைக்க வேண்டுமென்று இருந்த
ஆர்வத்தில் அதனால் வரும்
விளைவுகளை சற்றும் எண்ணிப்
பார்க்கக் கூட இல்லை...
கிடைத்த பிறகு தான் தெரிகிறது
அதன் வலி...
இப்போது முழுமையாக ருசிக்கவும் முடியவில்லை...
வேண்டாமென்று தூக்கி எறியவும் முடியவில்லை...
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக