எழுதிய கடிதங்களெல்லாம்
என் படுக்கையறையில்
என் தலையணையின் அடியில்
ஒளிந்துகொண்டிருக்கின்றன!!!
நான் கொடுத்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் தான்
அனைத்தையும் எழுதினேன்!
ஆனால், ஒரு சந்திப்பில் கூட அவளிடம் அதைக் கொடுக்க முடியவில்லை!!!
அதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை!
இருந்தும் எழுதுவதை நிறுத்தவில்லை!
என்றாவது ஒருநாள் என் கடிதங்கள் அனைத்தும்
அவளைச் சேரும் என்ற நம்பிக்கையில்
எழுதுகிறேன், எழுதுகிறேன்!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக