கடந்த இரண்டு நாட்களாக மனதில் ஏதோ ஒரு குழப்பம். எதுவும் நான் நினைத்தபடி நடப்பதில்லை.. நான் என்ன செய்கிறேனென்று எனக்கேத் தெரியவில்லை... என்று எண்ணும் அளவிற்கு இருந்தது. அதற்குக் காரணம், நான் கடந்த ஞாயிறன்று இழந்த என் 'ஜெபமாலை'. கிறிஸ்துவைச் சார்ந்தவர்களுக்குச் 'ஜெபமாலை' என்றால் என்னவென்று தெரியும். அதை வைத்து ஒரு சில மந்திரங்களைச் சொல்வோம். இயேசுவின் சிலுவை நமக்கு என்றும் வெற்றியைத் தரும் என்பது என் நம்பிக்கை.
ஞாயிறு ஆலயத்திற்குச் செல்லும் போது என்னுடன் அந்தச் ஜெபமாலையை எடுத்துச் சென்ற நான், வீட்டிற்கு வந்த பிறகு அது எங்கு வைத்தேன் என்ற நினைவில்லை... ஒரு விருந்து விழாவிற்குச் சென்றிருந்தோம். இரவு படுக்கைக்குச் செல்லுமுன் என் அறையில் தேடுகிறேன்.. அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை... என் வீடு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை.... நானும் யோசித்துப் பார்த்தேன்... 'நான் ஆலயத்திற்கு எடுத்துச்சென்றது ஞாபகம் இருந்தது. ஆனால், திரும்பக் கொண்டு வரவில்லை என்பது உறுதியாகத் தெரிந்தது'... சரி... கடவுளின் ஆலயத்தில் அது இருக்க வேண்டும்.. அல்லது... அது யார் கையில் இருக்க வேண்டுமென்று இறைவன் நினைக்கிறாரோ அவர் கைக்குச் சென்றிருக்கும் என்று மனதுள் எண்ணிக் கொண்டேன்.
இரண்டு நாட்களாக அந்தச் ஜெபமாலை இல்லாமல் தான் எனக்குள் இந்த வெறுமை என்று நினைக்கிறேன். அப்படி என்ன அதன் சிறப்பு?
என் உறவினர் ஒருவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வாடிகன் நகரம் புனிதப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் அங்கிருந்து எங்கள் குடும்பத்திற்காக வாங்கி வந்தது தான், அந்தச் ஜெபமாலை. வந்த நாள் முதல் நான் தான் வைத்திருக்கிறேன்.. என் கைப்பைக்குள் எப்போதும் இருக்கும். என் இரவு வேளைகளில், என் படுக்கைக்கு அருகில் வைத்திருப்பேன். எப்போது ஜெபித்தாலும், அது என் கையில் இருக்கும், இரண்டு வருடங்களாக...
திடீரென்று காணவில்லை என்றதும் மனது படபடத்து விட்டது... இருந்தாலும்... எல்லாம் இறைவன் அருள் என்றிருந்தேன்...
இன்று மாலை, பள்ளியிலிருந்து வீடு திரும்பி, என் அறைக்குள் நுழைந்தேன்.. இன்ப அதிர்ச்சியாக, என் ஜெபமாலை என் அறையில் இருந்தது... இது கண்டிப்பாக மனிதனால் கூடாத காரியம்... என் வீடு முழுவதும் தேடியும் அன்று கிடைக்காத என் ஜெபமாலை இன்று கிடைத்ததற்குக் காரணம்.. 'இறைவன் என்னோடு உறவாடிக் கொண்டிருக்கிறார்' என்று தான் அர்த்தம். இதை என் வீட்டில் கேட்க நான் விரும்பவில்லை.. காரணம்.... இது இறைவன் செயலே... அவரே எனக்கு, என் பொருளைத் திருப்பித் தந்துள்ளார்....
நன்றி இறைவா!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக