வியாழன், 28 செப்டம்பர், 2017

யாதுமறியா என் யாதுமானவளே...

அவ்வளவு அழகையும் ஒரே நேரத்தில் கொஞ்சுவது என்பது
கொஞ்சம் கடினம் தான்!
சேர்த்து வைத்துக் கொஞ்சலாம் நூறு ஆண்டுகள்!!!
கொஞ்ச நினைப்பது உன் அழகை மட்டும் அல்ல...
உன் மழலை மொழியையும் தான்!!!
உன் பேச்சுகளுக்கு அர்த்தம் கண்டுபிடிப்பது அரிது தான்
திருக்குறளைப் போல!!!
இரண்டடிகளி;ல் முடிந்துவிடும் குறளுக்குள் உள்ளார்ந்த அர்த்தம் போல் தான்
உன் பேச்சின் அர்த்தங்களும்!!!
உன் நடையழகைப் பார்த்து வியக்காத நாட்கள் உண்டோ?
உன் சிரிப்பழகின் சத்தத்தில் தான் ஸ்வரங்கள் தவழ்கின்றன!
உன் அழுகை கூட ஒரு இராகம் தான்!
இப்படி மொத்த அழகையும் அள்ளி உன்னிடம் வைத்துக் கொண்டு
பின் ஏன் என் கண்ணம் தழுவுகிறாய்?

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: