ஆர்வமாய் நான் நாடித் தேடிய அழகி நீ...
முவ்விரு வருடங்களுக்குப் பின்
உனக்கு ஆர்வமில்லாமல் போய்விட
நான் செய்த தவறுதான் என்னவோ?
ஏழேழு ஜென்மங்களும் பிரியேன்
என்ற என்னை ஒருசில வரிகளால்
பிரிய வைத்துவிட்டாய்!
பாரதி இல்லாமல் செல்லம்மா வருந்தியிருப்பாள் தான்!
இனியும் பாரதி இல்லாமல் செல்லம்மா வருந்தப்போகும் காலம் தான்!
பாரதியின் அருமை அவர் இருந்தபோது
யாருக்கும் தெரியவில்லை!
அதே நிலை தான் உனக்கும்!
இது நான் உனக்குத் தரும் சாபமல்ல!
நீ எனக்குத் தந்த சண்மானம்!!!
நன்றிகளுடன்....
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக