ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

புதியன புகுந்து....

அது ஏனோ தெரியவில்லை...
புதிதாய் வந்தால் எல்லாமே அழகாய்த் தான் தெரிகின்றது!
புதிதாய் வந்த மனைவி!
புதிதாய் வாங்கிய குளிர்சாதனப்பெட்டி!
புதிதாய் வாங்கிய நாய்க்குட்டி!
புதிதாய் வாங்கிய கைபேசி!
என்று ஏராளம்!!!
புதிதாய் வாங்கிய நாட்களில் நாம் உபயோகப்படுத்திய விதத்திற்கும்,
நாட்கள் ஆக ஆக நாம் கையாளும் விதத்திற்கும்
நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன...
இந்த வித்தியாசங்களுக்குக் காரணம் என்ன?
ஆரம்பத்தில் நாம் அவர்கள் மீது காட்டிய அன்பு

அல்லது

அவற்றின் மீதிருந்த பற்று குறைந்துவிட்டது!

அல்லது

அதற்கு அடுத்த தலைமுறை பொருட்கள் இன்னும் அதிக வசதிகளுடன் கிடைக்கின்றன...

ஏன் நம்மால் எதையும் வைத்துத் திருப்திப்பட்டுக் கொள்ள முடியவில்லை?
புதியது அல்லது இன்னும் அதிக வசதிகள் கொண்டது என்ற ஒரு பழக்கம் இல்லாமல் இருத்தல்...
என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும்
நம் தாத்தா, பாட்டி இன்னும் அந்தப் பொத்தான் அலைபேசிகளைத் தான் பயன்படுத்திக் கொண்டு இருப்பார்கள்...
காரணம்...
அவர்கள் அந்தப் பொருளை வாங்கியதன் காரணம் 'பேசுவதற்கு'
அதற்கான வேலையை அது செய்வதால்
அவர்களுக்கு அதுவே போதும்!!! வேறு எதையும் எதிர்பார்ப்பதில்லை!!!
நம் எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது?

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: