உன்னைவிட்டுப் பிரிந்த அந்த நிமிடம்
என் உயிரும் பிரிந்து செல்லத் தான் துடித்தது!
உன் நினைவுகள் மட்டுமே இப்போதென்னை
வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன!
உன் அன்பில் திளைத்திருந்த என்னைவிட்டுச் செல்ல
எப்படி மனம் வந்ததென்று தான் தெரியவில்லை!
நீ இல்லாத இரவுகள்!
நீ சொல்லாத நிகழ்வுகள்!
நீ அனுப்பாத காலைக் குறுஞ்செய்திகள்!
இணைந்து செல்ல முடியாத நடைப்பயணங்கள்!
உன்னோடு சேர்த்தே எல்லாவற்றையும் இழந்து விட்டேன்...
என்னிடம் இருப்பது இரண்டு மட்டும் தான்..
என் உயிர்...
உன் நினைவுகள்...
அவளுக்காக!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக