படித்த படிப்பிற்கு வேலை கிடைத்துவிட்டதென்று கூறுவார்கள்...
ஓரளவிற்குப் படித்து விட்டோம்... அதை வைத்து இனி வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்பது தான் அதன் அர்த்தமும் கூட...
ஆனால்... இந்த ஆசிரியர் தொழிலில் மட்டும் நம்மால் அப்படிக் கூற முடியாது..
நாம் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப்
பதில் கூறக் கூடிய விதத்தில் நம் தயாரிப்பு இருந்தால் தான்...
அந்த வகுப்பிலோ... அல்லது அந்தப் பள்ளியிலோ...
ஒரு ஆசிரியரால் தாக்குப்பிடிக்க முடியும்!
ஆசிரியர்...மாணவர்களை ஆளக் கூடியவர்!
ஒரு ஆசிரியரின் பழக்க வழக்கங்கள் எளிதாக மாணவர்களால் உட்கிரகித்துக் கொள்ளக் கூடியவைகளாக இருக்கின்றன...
ஒரு மாணவன் தம்மைப் பார்த்து 'எனக்கு இந்த ஆசிரியர் தான் தமிழ் பயிற்றுவித்தார்' என்று கூறும் போது நாம் அடையும் மகிழ்ச்சி மட்டற்றது.
தனக்குப் பாடம் சொல்லித் தரும் ஆசிரியரை விவரம் தெரிந்த எந்த மாணவனும் மறந்திருக்க மாட்டான்.
ஆசிரியர் என்ற பெயரே மெய்சிலிர்க்கச் செய்கின்றது..
அப்படிப்பட்ட ஆசிரியப் பணியை மனதார, விரும்பிச் செய்ய இனிய வாழ்த்துகளுடன்...
அனைத்து ஆசிரியப்பெருமக்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்...
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக