நானாய் இருந்திருந்திருந்தால்
யாருக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்காது!
இப்போது இவளிடம் அனைத்தையும் கூற வேண்டிய நிலை!
ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசினால் கூட
உனக்கு அவ்வளவு திமிரா என்பது!
மற்ற பெண்களைப் பற்றிப் பேசினால் கோபம்!
யாரிடமும் அதிக நேரம் பேசக் கூடாது!
இரவு நேரங்களில் சீக்கிரம் உறங்கச் செல்ல வேண்டும்!
கோபத்தைக் கூட வெளிக்காட்டக் கூடாது!
அவளை மட்டுமே புகழ்ந்து பேச வேண்டும்!
அவளிடம் எதையும் மறைக்கக் கூடாது!
என் தாயிடம் பேச இவளிடம் அனுமதி கேட்க வேண்டும்!
என் தந்தையின் கைச்செலவிற்கு
இவள் கையை நான் ஏந்த வேண்டும்!
வெளியூர் பயணங்களில் அனைத்தையும்
பார்த்துக் கொள்வதும் அவள் தான்!
நான் அணியும் சட்டை கூட
அவள் கண்ணசைவின் சம்மதத்திற்குப் பின் தான்!
என் உணவைத் தீர்மானிப்பதும் அவள் தான்!
என் சந்ததியைத் திட்டமிடுவதும் அவள் தான்!
இப்படி அவள் அவளாகவே மாறி
என்னைத் தரையில் படுக்க வைத்து
தார் ரோடு ஆக்கிவிட்டாள் 'என் தாரம்!'
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக