அவளின் தனிமையானது
பதினாறு வயதினிலேயே அவளைக் காதலிக்க ஆரம்பித்தது!
அவளும் அத்தனிமையை அவ்வளவு நேசித்தாள்!
அவளருகில் யாரும் நெருங்கவில்லை!
அவளும் யாரையும் நெருங்கவில்லை!
இருபது வயதில் ஒரு இளம்பெண்ணிற்குரிய
அனைத்து உணர்ச்சிகளும் அவளுக்கும் இருந்தன!
வெளியில் காட்டிக் கொள்ளாமல் அடக்கிக் கொண்டே வந்து
ஆறு வருடங்களைக் கடத்திவிட்டாள்!
ஏழாவது வருடம் அவளின் தனிமைத்தோழி
அவளைவிட்டு வேறெங்கோ சென்றுவிட்டாள்!
தோழியைத் தேடிக் கண்டாள், ஒரு தோழனை!
தனிமையை விட இவன் நல்ல நண்பனாய் இருந்தான்!
இருவரும் உறவாடித் திளைத்திருந்தனர்!
அவளில்லாமல் அவனில்லை... அவனில்லாமல் அவளில்லை...
என்றிருந்தனர்...
வருடங்கள் நகர்ந்தன...
அவனும் அவளைப் பிரிந்து செல்ல வேண்டிய நிலை வந்தது!
துக்கம் தொண்டையை அடைத்தது!
அவன் பிரிவு அவளுக்கு இறப்பின் வலியைக் கொடுத்தது!
அவளின் கடைசிக் காலங்கள்!
மறுபடியும் தனிமையே அவளின் தோழனாயிற்று!!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக