பெரும்பாலான நேரங்களில்...
நாம் ஒரு உயர்ந்த நிலையை அடைந்துவிட்ட பிறகு...
நாம் அடைந்த சிரமங்களையோ, முன்பிருந்த நிலையையோ நினைத்துப் பார்க்க மறந்து விடுகிறோம்!
அதனால் தான் ஒருமுறை நல்மதிப்பைப் பெற்ற நம்மால்
அடுத்த முறை, இது இப்படிச் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற
மற்றவர்களின் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை!
இப்படித் தட்டுத் தடுமாறி நாம் உயர்ந்த நிலையை அடைகிறோம்
நம்மை இந்த வேலையைச் செய்யச் சொல்ல இவர் யார்? என்ற எண்ணம் கூட
சிலநேரங்களில் தோன்றலாம்.
வேலைகளில் உயர்ந்தவை தாழ்ந்தவை...
சிறந்தது மோசமானது... என்றெல்லாம் பிரித்துப் பார்க்க முடியாது.
நன்றாக வேலை செய்பவர் அதற்கேற்ற கூலி பெறுகிறார்..
மனதார வேலை செய்பவர் அதற்கேற்றவாறும்
கடனுக்காக வேலை செய்பவரும் அதற்கேற்றவாறு
தங்கள் கூலிகளைப் பெறுகின்றனர்!
இதைத் தான் வேதப் புத்தகம்..
'தன்னைத் தானே தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்; தன்னைத் தானே உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்.' என்று கூறுகின்றது.
நம்மைத் தாழ்த்தி, நமக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்யும் போது, நம்மை உயர்த்த இறைவன் ஆசை கொள்வார். அதனால், எந்த வேலையையும் செய்யக் கூச்சப்படத் தேவையில்லை.
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக