வியாழன், 13 ஏப்ரல், 2017

அந்த ஆறு மணி நேரங்கள்....

என்னையே மறந்து நின்றேன்...
உன்னை மறக்க முடியாமல் நின்றேன்...
ஒரு நிமிடம் கூட மற்றவற்றை எண்ணத் தோன்றவில்லை...
என் எண்ணமெல்லாம் ஒன்றாகவே இருந்தது!
உன்னை உறுதியாய் பற்றிக் கொண்ட பிறகு
வேறொன்றிற்கு இடமில்லை போல் தெரிகிறது!
இவ்வளவு வருடங்களை இழந்தவிட்டேனோ என்று
எண்ணத் தோன்றுகிறது!
உம் அருகில் அமர்ந்து உம்முடன் பேச...
உம் கைகோர்த்துக் கொண்டு கதைகள் பேச...
ஆரம்பித்துவிட்டேன்...
என்னை ஏற்று முழுமையாக அன்புசெய்ய
உம்மால் மட்டுமே முடியும் என்பதை உணர்கிறேன்!
தொடர்ந்து உடனிருந்து வழிநடத்தும்.

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: