உன் கைவிரலைச் சுற்றி
உனக்குக் காவலாய்!
காவல்காரன் கூட இப்படி உன்னைக் காக்க முடியாது!
நான் இரும்பானாலும்
நான் வெள்ளியானாலும்
நான் தங்கமானாலும்
நான் வைரமானாலும்
அழகு தான்!
என்னை அணிபவருக்கு மட்டுமல்ல!
என்னை வாங்கிக் கொடுத்தவரும் கூட பெருமையடைவார்!
இருவருக்குமிடையே உள்ள பிணைப்பை
உறுதிசெய்வேன் நான்!
என்னை விரும்பாதவர் உலகிலுண்டோ!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக