திங்கள், 17 ஏப்ரல், 2017

இலவசமாய்...

இலவசமாய் கிடைக்கிறதென்பதற்காய்...
பெற்றேன் என் தாயின் அன்பை....
அனுபவித்தேன் என் தந்தையின் பாசத்தை... பணத்தை....
உணர்ந்தேன் சகோதர நேசத்தை...
பெற்றுக் கொண்டேன் நல்ல நட்பினை...
இன்னும் நிறைய இலவசங்கள்...
பெறுவதில் மட்டுமே லயித்துப்போன என் மனம்
கொடுக்க மறுக்கிறது! மறக்கிறது!

இலவசமாய் கிடைக்கிறதென்பதற்காய் அதில் சுகம் கண்ட என்னை
இலவசமாய் மற்றவர்களுக்கும் கொடுக்கும் வரம் தா என் இறையே!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: