உறவுகளுடனும், நட்புகளுடனும், தெரிந்தவர்களுடனும், தெரியாதவர்களுடனும் கூடி மகிழ்ந்து, நேரம் செலவிடும் போது, அந்த நாள் இனிமையானதொரு நாளாகத் தான் தெரிகிறது, நம் கண்களுக்கு... இன்று காலையில் என் தோழியின் வீட்டிற்குச் சென்றது முதல் இன்று இரவு புதிதாக பழக்கப்படுத்திக் கொண்ட நட்பிடம் அலைபேசி எண் வாங்கும் வரை எல்லாமே என் மனதில் ஏதோ ஒரு வரலாறு போல் பதிந்துவிட்டது.
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு வரலாறு புத்தகமே எழுதலாம் போல... நண்பர்களுடன் செலவிடும்போது மட்டும், நேரம் செல்வதே நமக்குத் தெரிவதில்லை. அதுவும் அவர்களுடனான நெடுந்தூரப் பயணம், சிறிய ஒரு கடையில் நொறுக்குத்தீனி, நண்பர்களின் குழந்தைகளைக் கொஞ்சுவது, சேர்ந்து டீவி பார்ப்பது, அரட்டை அடிப்பது, எல்லாமே சுகம் தான்.
இப்படியே தினமும் இருந்துவிடக் கூடாதா என்று மனம் ஏங்குகிறது. ஆனால், ஒன்றை மட்டும் புரிந்து கொண்டேன்.... நண்பர்களுடன் இருக்கும் சந்தர்பத்தை மட்டும் என்றும் இழக்கவே கூடாது.
இந்த இனிய நாளுக்கு நன்றி இறைவா!!!
இனியபாரதி.
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு வரலாறு புத்தகமே எழுதலாம் போல... நண்பர்களுடன் செலவிடும்போது மட்டும், நேரம் செல்வதே நமக்குத் தெரிவதில்லை. அதுவும் அவர்களுடனான நெடுந்தூரப் பயணம், சிறிய ஒரு கடையில் நொறுக்குத்தீனி, நண்பர்களின் குழந்தைகளைக் கொஞ்சுவது, சேர்ந்து டீவி பார்ப்பது, அரட்டை அடிப்பது, எல்லாமே சுகம் தான்.
இப்படியே தினமும் இருந்துவிடக் கூடாதா என்று மனம் ஏங்குகிறது. ஆனால், ஒன்றை மட்டும் புரிந்து கொண்டேன்.... நண்பர்களுடன் இருக்கும் சந்தர்பத்தை மட்டும் என்றும் இழக்கவே கூடாது.
இந்த இனிய நாளுக்கு நன்றி இறைவா!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக