வெள்ளி, 28 ஏப்ரல், 2017

கவலையுடன் கிடக்கிறேன்!

நீ தீண்டுவாய் என்ற நம்பிக்கையில்
உன்னை நம்பி
உனக்காக உன்னுடன்
நான் வந்த பொழுதிலிருந்து
இன்றுவரை நீ என்னைத்
தீண்டியதே கிடையாது!
அழுக்கடைந்து ஒரு மூலையில்
உனக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்!
நீ தீண்டும் பொழுது உன்மனம்
அடையும் நிம்மதி!
அதில் என் மனம் ஆறுதலடையும்!

அன்புடன்,
இனியபாரதி.

கருத்துகள் இல்லை: