திங்கள், 10 ஏப்ரல், 2017

முப்பரிமாணம்...

இன்று நான் கேட்ட, பேசிய வார்த்தைகளில் என்னைப் பாதித்தது... 'முப்பரிமாணம்' என்ற வார்த்தை தான். இது ஒரு தமிழ்ப் படத்தின் தலைப்பு. இந்தப் படத்திற்குத் தலைப்பு பொருந்துகிறதோ இல்லையோ, என்னைச் சிந்திக்க வைத்தது. முப்பரிமாணம் (3னு னுiஅநளெழைn). இதை நான் புரிந்து கொண்ட விதம்.. நாம் ஒரு செயலைச் செய்கிறோம் என்றால், அதை ஒரு கண்ணோட்டத்தில் இருந்து மட்டும் பார்க்கக் கூடாது. எல்லா விதத்திலும் இது சரிதானா என்று யோசிப்பது.
இந்தப் படத்தில், கதாநாயகனை விரும்பும் கதாநாயகி, ஒருகட்டத்தில் படத்தில் நடிக்கும் ஒரு நடிகனுக்குத் தன்னைப் பிடித்ததால், அவன் பின்னால் சென்றுவிடுவாள். இதைக் காதலித்தவன் வந்து கேட்கும்போது, 'உனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால், போக மாட்டாயா?' என்கிறாள். மனமுடைந்த கதாநாயகன் தற்கொலை செய்து கொள்கிறான். இந்தவிசயம் நடிகனுக்குத் தெரியவர அவன் அவளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். இது தான் கதை....
ஆக, வாழ்க்கைக்குத் தேவை பணம் மட்டும் தான் என்று அந்தப்பெண் நினைத்து, தன் காதலனைவிட்டுச் செல்கிறாள். கடைசியில், அவள் கதையும் கேள்விக்குறியில் தான் முடிகின்றது!
எங்கள் பள்ளி முதல்வர் அடிக்கடி சொல்வார் 'கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே' என்று. அது நூற்றுக்கு நூறு உண்மை தான்.
ஒரு செயலை மற்றவர்க்கு செய்யும்போதே 'இதைச் செய்வதால் நமக்கு என்ன இலாபம்?' என்று தான் மனம் யோசிக்கின்றது. எல்லா வகையிலும் நமக்குச் சாதகமாய் இருந்தால் மட்டும் தான் அந்த வேலையைச் செய்கிறோம். இல்லையென்றால் அதைச் செய்யத் துணிவதில்லை.
ஒருவருடன் பேசுகிறோம், உறவு வைத்துக் கொள்கிறோம் என்றால்... இவர் பணக்காரரா... செல்வாக்கு நிறைந்தவரா... காரில் செல்பவரா!!! என்று தானே பார்க்கிறார்களே தவிர, உண்மையாக அன்பு செய்பவரா என்று யாரும் பார்ப்பதில்லை... அதனால் உண்டானதே இந்த முப்பரிமாணம்.
இப்படி ஒரு விசயத்தைப் பற்றி என்னை யோசிக்க வைத்த என் உறவுகளுக்கு நன்றி!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: