ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

நம்பிக்கை கொண்டோரின் வாழ்க்கை முறை...

இன்று ஆலயத்தில், அழகானதொரு மறையுரையைக் கேட்டோம். அதை அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வம், என்னை இப்போதே எழுத வைத்துவிட்டது.

'கிறிஸ்தவர்கள் பிறந்தவர்கள் அல்ல... உருவாக்கப்படுகிறவர்கள்'

ஆதி கிறிஸ்தவர்கள் 'திருத்தூதர் கற்பித்தவற்றிலும், நட்புறவிலும், அப்பம் பிடுவதிலும், இறைவேண்டலிலும்' உறுதியாய் நிலைத்திருந்தார்கள்.

இந்த நான்கு பண்புகளும், ஒரு நல்ல கிறிஸ்தவன் உருவாகக் காரணங்களாக, காரணிகளாக இருக்கின்றன.

1. திருத்தூதர் கற்பித்தவற்றிலும்
திருத்தூதர்கள் என்றால், திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், அருட்சகோதரிகள் என்று அனைத்துத் துறவிகளும் அடங்குவர். அவர்கள் கற்பிப்பதை ஏற்றுக் கொண்டு வாழ்வாக்குபவர்கள்.

2. நட்புறவிலும்
மற்றவர்களிடம் சகோதர எண்ணத்துடன் பழகும் எண்ணம் கொண்டவர்கள், அண்டை அயலாரிடம் பாசத்துடனும், பரிவுடனும் நடந்து கொள்பவர்கள்.

3. அப்பம் பிடுவதிலும்
ஞாயிற்றுக் கிழமைகளிலும், கடன்திரு நாட்களிலும் தவறாது ஆலயத்திற்கு வந்து, நற்கருணையை உட்கொள்பவர்கள்.

4. இறைவேண்டலிலும்
அனைவரும் ஒன்றாய் கூடி, உலகத்திற்காக வேண்டுபவர்கள்.

இப்படி, இந்த நான்கு குணங்களும் தான், உண்மையான கிறிஸ்தவனை உருவாக்குகின்றன!

இன்று, நான் என்னையே கேள்வி கேட்டுக்கொள்கிறேன்.
நான் வெறுமனே பிறந்தேனா?
அல்லது உருவாக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறேனா?

அனைவருக்கும் வாழ்த்துகள்!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: