இன்று எங்கள் ஆலயத்தில் இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து 'சிலுவைப்பாதையை' நடத்தினோம். இதற்காக நாங்கள், கடந்த ஒரு வாரகாலமாக நன்றாகப் பயிற்சி எடுத்தோம். பயிற்ச்சிக்காகவே அவர்களுக்கு, அவர்களுடைய குறிப்புகளை, நான் அவர்களுக்கு எழுதிக் கொடுத்திருந்தேன். அதை வைத்துத் தான் பயிற்சி எடுத்தார்கள். எழுதிக் கொடுத்திருந்த தாளை, மிகப் பத்திரமாகப் பார்;த்துக் கொண்டார்கள்.
இன்று சிலுவைப்பாதையும் முடிந்து விட்டது. அந்தக் காகிதங்களின் வாழ்வும் முடிவுக்கு வந்து விட்டது. சிலுவைப்பாதை முடிந்து, நாங்கள் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றி, வாசித்து முடித்த அனைத்து காகிதங்களும் கிடந்தன. அவற்றை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தேன்.
வீட்டிற்கு வந்து, அதை எடுத்து வெளியில் வைக்கும் போது தான் பார்த்தேன். எவ்வளவு அழகான வார்த்தைகள், இயேசுவின் வார்த்தைகள்.... இவற்றின் நிலைமையே ஒரு சில நேரங்களுக்குப் பின் குப்பைத் தொட்டியில் தான் கிடக்கின்றன!
நம் நிலைமை!!! நம் வாழ்க்கை!
ஒரு சில நேரங்களில், நம் நண்பர்களை, நம் உறவுகளை ஒரு சில காரணங்களுக்காக நம்முடன் வைத்துக் கொண்டு, நம் வேலை முடிந்ததும், அவர்களை உதாசினப்படுத்துவது, உதறித்தள்ளுவது போன்ற சம்பவங்கள் நம் வாழ்க்கையில், ஏன் நாமே கூட மற்றவர்களுக்குச் செய்திருக்கலாம்.
அந்தத் தருணங்களை நினைத்துப் பார்ப்போம்.
நமக்காகத் தன்னையே வருத்திக் கொண்டவர்களை நினைத்துப் பார்ப்போம்.
தேவைக்கு உபயோகிக்கும் கருவிகளாய் இல்லாமல், நம் உறவுகளுக்கு மதிப்பு கொடுக்க கற்றுக் கொள்வோம்.
இந்த நாள் இனிய நாளாகட்டும்.
இனியபாரதி.
கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
வெள்ளி, 7 ஏப்ரல், 2017
எப்போது மதிப்பு?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக