வெள்ளி, 21 ஏப்ரல், 2017

காணாமல் போனதை...

தொலைத்து விட்ட  இடமென்னவோ
தூரமாய் இருக்க
அருகிலேயே தேடிக் கொண்டிருந்தால்
கிடைப்பதென்னவே
அற்ப சந்தோஷங்களும்
இடைவிடாத் தூக்கமும்
மௌன குளியல்களும்
அதிகநேர அரட்டைகளும் தான்!
தேடுகிறேன்... தேடுகிறேன்...
தேடிக்கொண்டேயிருக்கிறேன்!
கிடைக்கும் என்ற நம்பிக்கையில்...


இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: