வியாழன், 6 ஏப்ரல், 2017

அலைச்சல்...

நண்பர்களுக்காக நண்பர்களுடன்..
உன்னுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது என்னவோ
அழகாகய் தான் இருக்கின்றது!
தெருவில் செல்லும் யாரையும் கண்டு கொள்ளாமல்
கடைத்தெருவில் வடை வாங்கி இருவரும்
சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டே சுற்றும் போது
தெரியாது... நம்மைத் தான் தெருவில் செல்பவர்கள்
பார்க்கிறார்கள் என்று!
ஏதாவது கடைக்குள் நுழைந்தால்
நம்மைத் தான் எல்லோரும் பார்ப்பார்கள்..
பார்க்கக் காரணம் அழகு என்று சொல்ல முடியாது..
நாம் சிரிக்கும் ஓசை தான் அவர்களைப் பார்க்க வைக்கிறது!
அது கூட தெரியாமல் நாம் பேசிக் கொண்டிருப்போம்!
சில நேரங்களில் பேசிக் கொண்டே
நம் வீட்டைத் தாண்டி சென்று விட்டிருப்போம்!
வீட்டிற்கு வந்து சற்றும் இளைப்பாறாமல்
மறுபடியும் பேச ஆரம்பித்து விடுகிறோம்!
நமக்கு அலைச்சல் தெரியாதா என்ன?

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: