திங்கள், 24 ஏப்ரல், 2017

கவலையின்றி...

என் மணம் காற்றில் கலக்கும்போது கூட
நான் கவலையின்றி சிரிக்கிறேன்!
என்னை மற்றவர் பறிக்கும்போது கூட
அழகாய் ஒத்துழைக்கிறேன்!
என் தாயை யாராவது சேதப்படுத்தினால் கூட
நாங்கள் யாரையும் புண்படுத்துவது இல்லை!
நீரின்றி பல நாட்கள் வாழ்ந்து என்தாய்
எங்களுக்கு உணவூட்டுகிறாள்!
எப்போதும் புன்னகைத்துக்கொண்டே
எங்கள் நாட்களைக் கவலையின்றி கழிக்கிறோம்!
இப்படிக்கு,
மலர்.

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: