வெள்ளி, 14 ஏப்ரல், 2017

தவிக்க வைக்கும் வெள்ளி...

உன்னை நோக்கிய என் பயணம் ஆரம்பமான
அந்த இனிய காலை வேளை!
யாருக்கும் அஞ்சாமல் தேடி வரத் தூண்டிய துடிப்பு!
வெயிலையும் பொருட்படுத்தாமல் வெறிச்சோடிய
தெருக்களில் சுற்றி வந்த பேருந்தில்...
உல்லாசமாய்...
உன் முகத்தைக் காண...
கண் இமை மூடாமல் உன் உடனிருப்பை
நினைத்துக் கொண்டு...
பேருந்திலிருந்து இறங்கிய அந்த நிமிடம்
உன் அருகாமை அனைத்தையும் மறக்கச் செய்தது!
அன்று மாலை உன்னுடன் சேர்ந்து அருந்திய தேநீர்...
திக்கிக்கும் தேனமுதமாய் இன்றும் இனிக்கின்றது!
அன்று தான் உணர்ந்தேன் உன் அருகாமை எனக்கு
எவ்வளவு தேவை என்று!
இனிமையான இரவுப்பொழுதில் உன்னுடன் உரையாடிய
அனைத்தும் என்றும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே
இன்று என்னைத் தவிக்க வைக்கிறது....


இனியபாரதி.

கருத்துகள் இல்லை: