ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

இதே போல்...

உறவினர்களுடன் அதிகம் நேரம் செலவிடாத நான், இன்று என் அண்ணியின் வீட்டிற்கு அவர்கள் வற்புறுத்தலின் பேரில் சென்றேன். சென்றதன் பிறகு தான் தெரிந்தது, ஒருவேளை நான் செல்லாமல் இருந்திருந்தால் எவற்றையெல்லாம் அனுபவிக்காமல் இருந்திருப்பேன் என்று. அவ்வளவு அழகான குடும்பம், உறவுகள். அவர்களை மதிக்காத தருணங்களை நினைத்து வருந்தினேன். இந்த மாதம் முழுவதும் சோகப் படலத்தில் தான் ஓடியது. ஒரு சில நாட்களைத் தவிர. இந்த மாதத்தின் கடைசி நாளும் வந்துவிட்டது. இன்றோடு என் கவலைகளையும் தொலைக்கிறேன். பிறக்கின்ற மே மாதம் அனைவருக்கும் இனிதாய் அமைய வாழ்த்துகள்.

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: