திங்கள், 9 நவம்பர், 2015

பதறாத காரியம் சிதறாது...

கடந்த இரண்டு நாட்களாக, உடன் பணிபுரியும் நண்பர்களுடன், உல்லாசப் பயணம். மதுரை அருகிலுள்ள செசி இல்லத்தில் தான் இந்த இரண்டு நாட்களும். பயணம் இனிதே நிறைவுற்று நேற்று மாலை வீடு திரும்பினோம். இரண்டு நாட்கள் ஒரேஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். என்ன தான் உடன் பணிபுரிபவர்களுடன் சென்றாலும், நண்பர்களுடன் செல்வதைப் போல் வராது,என்பதை, இந்தச் சுற்றுலா எனக்கு உணர்த்தியது. நன்றாய்த் தான் இருந்தது. இருந்தும், ஏதோ ஒரு வகையான உணர்வு. இந்தச் சுற்றுலாவில் நிறையவே கற்றுக் கொண்டேன். அவற்றில், நான் பகிர்ந்து கொள்ள நினைப்பது ஒன்றே ஒன்றுதான்.

நிறைய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அனைத்திலும் கலந்து கொண்டேன். ஆனால் வெற்றி பெறவில்லை. அனைத்திலும் எங்கள் அணி தான் முன்னிலையில் இருக்கும். கடைசித் தருணத்தில், என்னுடைய பதட்டத்தினால் எல்லாம் வீணாய்ப் போய்விடும். இப்படித் தான், மூன்று முறையும் முதல் இடத்தை இழந்துவிட்டோம். அப்போது, ஒருஆசிரியை எனக்கு அறிவுரையாகச் சொன்னதுதான் இன்றைய தலைப்பு.
"நாம் எவ்வளவு தான் அறிவாளியாகவோ, ஞானியாகவோ இருந்தாலும் பதறாமல் செய்யும் காரியம் அனைத்தும் வெற்றிபெறும்". என்று அவர் கூறிய அறிவுரைதான், நான் இன்று எனக்காய் எடுத்துக் கொள்ளும், ஒரு வாழ்க்கைத் தத்துவம்.
அழகான வாக்கியம் 'பதறாதகாரியம் சிதறாது'
நமக்கு இழப்பு நேர்ந்தாலும், நம் அன்புக்குரியவர் நம்மை விட்டுச் சென்றாலும், நமக்கே எப்போதும் துன்பம் வந்து கொண்டிருந்தாலும், பதறாமல் அனைத்தையும் எதிர்நோக்கும் தைரியத்தை மட்டும் மனதில் நினைத்து,
அதன்படிசெயல்பட்டால் நாமும் வெற்றியாளர் தான்.

கருத்துகள் இல்லை: