இன்று திருக்கார்த்திகைத் திருநாள்.
ஒளி இருக்கும் இடத்தில் இறைவன் என்றும் நிறைந்திருப்பான்.
இன்று, தீபங்களை ஏற்றும் போது மனதில் ஒருபுத்துணர்ச்சி பிறந்தது போல் தோன்றியது.
பழைய உறவுகளைச் சந்தித்தேன். புதுப்பித்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக இருந்தது, இந்நாள்.
ஒருவருக்காய் வாழ்வதைவிட, பலருடன் ஒன்றித்து வாழ்வது அதை விட மகிழ்ச்சியையேத் தரும்.
இந்த ஒளிநாளில் மற்றவரின் வாழ்விலும், என்னால் ஒளியேற்ற முடிகிறதா என்று எண்ணிப் பார்க்கிறேன்.
அதற்காக சிறிதாவது முயற்சி எடுக்கிறேன்.
இறைவன் அருளால் அனைத்தும் நன்றாய் அமையும்.
இனிய காலை வணக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக